Posted by : Unknown Sunday, September 9, 2012


பொட்டழித்த நெற்றியிலே
பத்திட்ட கந்தையினை
காலையிலே  கண்ணம்மா, 
கல் பட்ட காயத்தினது
செங்குருதி சீர்படுத்த,,,

தட்டில்  போட்ட பழையத
பக்கத்துல வச்சுருக்கேன்
பத்தரைக்கு  மணி அடிக்கும்
ஒரு வாயி  முழுங்கிக்க 

கந்துவட்டி கேட்டிருக்கேன்
கணக்க முடிக்காம கிடையாதாம்,,,

கணக்காளர் வந்ததுமே
கைக்காசு தந்துடுவார்
பஞ்சாயத்து கொட்டறையிலே
மஞ்சமருந்து  வாங்கிக்கலாம்

நேத்து பெஞ்ச அடமழை
கூரையெல்லாம் ஒழுகியதாலே
நனைஞ்ச விறக
நாலு காசா குறைச்சுட்டாவுக

வெட்டிவைச்ச விரகெல்லாம்
விரசாக முடிச்சதுமே
வியாபாரி எடுத்துடுவான்
வீடு வந்து சேர்ந்திடுவேன்

டவுன் பஸ்சுல
பால்ராச பார்த்தேன்
நம்ம பய்யனுக்கு 
ஆண்புள்ள 
பொறந்திருக்காமா

பேரனையும் போய் 
பார்த்துடலாம்
கொஞ்சம் பொருத்துக்க தாயி!!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -