Posted by : Unknown
Tuesday, January 8, 2013
விரிசல்களில் எல்லாம்
தேடி முளைப்பது இல்லை
விதைகள்!!
காதலும் அப்படித்தான்
காரணங்களை தேடி
பின் முளைப்பதில்லை...
உன் நட்பினை
தேடி வரும் நான்
காதலென இன்னும்
உணரவில்லை தோழா!!
காலங்களின் சுழற்சியில்
காதல் செய்யலாம்(!)
விடியலின்
வெளிச்சங்களைப் பற்றி
இரவுக்கு இப்போதே
எப்படி தெரியும்?
காத்திரு தோழா
- நட்புடன்
உன் தோழியானவள்!!
வர போகும் காதலுக்கு வாழ்த்துக்கள் நண்பா ..........கவிதை பூடகமாக செல்லுகிறது .........ஆனாலும் நல்ல வார்த்தைகளை தேடி கோர்த்த விதம் அழகு
ReplyDeleteஆகையினால் காதல் செய்யாதீர்!! என்று பெரிய கவிதை தொகுப்பையே வெளியிடும் அளவிற்கு கோபம் இருக்கிறது சகோ,,
Deleteவாழ்த்துகள் இப்ப வந்து சொல்றீங்களே@@
கவிதை நன்று...வரிகளூம் அப்படியே..
ReplyDeleteகாதலும் அப்படித்தான்
காரணங்களை தேடி
பின் முளைப்பதில்லை...
உண்மை ஆனால் இன்று காரணங்களோடு காதல் முளைப்பதாக காதலை கொச்சப்படுத்துகிறார்கள்.