- Back to Home »
- ilangai , palachandran , பாலச்சந்திரன் , பிரபாகரன் »
- விரைவில் வெற்றிச் செங்கொடியோடு
Posted by : Unknown
Tuesday, March 26, 2013
எச்சிலை தொட்டழித்து
எழுதிய எழுத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை
இருதயத்தின் அடிதொட்ட
இரும்பின் காயம் கண்டேன்...
சுட்டவன் புத்திசாலிதான்,,
மார்த்தொட்ட குண்டு
புறமுதுகுடைத்தால்,
எந்தை மைந்தர்கள் - அவன்
தலை சாய்த்திடுவனரோ
என்றெண்ணியே என்
நெஞ்சுடைத்து உயிர் பரித்தான்...
காலன் தொட்ட கடைசி மூச்சில்
இந்த காலம் மறக்கா..,
வரலாறானேன்
பச்சிளம் குழந்தையென்
பசி தீர்க்க
எச்சிலைதிண்ணும்
கோழையல்ல நான்
விடுதலையுணர்வை
என் மக்களுக்கு கொடுத்தே
விடைபெறுகிறேன் - அதிலே
அகமகிழ்வடைகிறேன்!!!
துரோகிகளை, எதிரிகளை
இனம் கண்டெழுந்து,
வேட்கையை தகித்துக்கொள்ள
அக்காக்களோ, அண்ணன்களோ
இன்னுயிர் தீர்க்காதீர் -
இன்னல்கள் தீர
இனி ஒரு விதி செய்யுங்கள்!!
எந்தையின் மைந்தர்களே!!!
எம் ஒருவனொடு போய்விடவில்லை
இன்னும் முட்களுக்கிடையில்
பச்சிளம்குழந்தைகளின்
தொப்புள்கொடி முடியாத
இரத்த சீற்றம் இடைவிடாதே
வடிந்து கொண்டிருக்கிறது....
போராடுவது
வெற்றிக்காக அல்ல
உரிமைக்காக என்று
சூழுரைத்து வெறியேற்றுங்கள்
திரும்பி வருகிறேன்
வெகு விரைவில்
புது களத்தில்
புளுதி பறக்க
வெற்றிச் செங்கொடியோடு
முத்தண்ணன் முன்நிற்க
பக்கத்தில் எந்தையுடன்
உங்கள் சிந்தையினூடே....
- பாலச்சந்திர பிரபாகரன்